என் மேகம் ???

Tuesday, September 30, 2008

மாறிவிட்டதடி என்னுலகம்

கடலோரம் என்றாலே
ஆர்ப்பரிக்கும் அலைகளும்
தீப்பிழம்பாய் சூரியனும்
சிலு சிலுவென்ற காற்றும்
தடம் பதியும் மணலும்
மனம் கொள்ளை கொள்ளும்...

இன்று மனதில் நிற்பதெல்லாம்
அலைகளின் வரவில்
ஆர்ப்பரிக்கும் மழலைகள் ...
செங்கதிரோன் செவ்வொளியில்
பூரிக்கும் உன் கன்னங்கள் ..
சில்லென்ற காற்று
சிலுப்பி விடும் உன் குழல்கள்..

மாறிவிட்டதடி என்னுலகம்...

அலைகள் கலைக்கும் மணலில்
எழுத்து எதற்கு என்றவள் தான்
உன் சிரிப்பிற்காக, அழிய அழிய ...
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்

மணல் வீட்டை கலைத்தவரிடம்
கோபம் கொண்டவள் தான்
நீ கலைப்பதற்கென்றே
கோட்டைகள் கட்டுகிறேன்
உன்னுடன் சேர்ந்து நானும்
கலைத்துச் சிரிக்கிறேன்...

குப்பையாகும் வீடென்று
பொறுக்காத சிப்பிகளெல்லாம்
இன்று நம் கையில்
நம் வீட்டை அழகுப்படுத்த...

என் அருமை பெண்ணே
உன்மயமானதால்
மாறிவிட்டதடி என்னுலகம்...

5 comments:

ஆயில்யன் said...

//அலைகள் கலைக்கும் மணலில்
எழுத்து எதற்கு என்றவள் தான்
உன் சிரிப்பிற்காக, அழிய அழிய ...
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்///


நல்லா இருக்கு :)

pudugaithendral said...

கலக்கல்.

மிக ரசித்தேன்.

அமுதா said...

நன்றி ஆயில்யன்...
நன்றி புதுகை தென்றல்...

தமிழ் அமுதன் said...

அழகு!

அமுதா said...

நன்றி ஜீவன்