என் மேகம் ???

Saturday, December 24, 2011

அதீதத்தில் “மழை”

சென்னையில் மழை பொழிந்ததொரு பொழுதில் எழுதியது தான் இப்பொழுது அதீதம் டிசம்பர் 11, 2011 இதழில் வெளிவந்துள்ளது.

மழை
---------
குழந்தையின் கேள்விகளாக
ஓயாது பொழிகிறது

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்

அடித்து வரும் குப்பைகளாக
வலிகளையும் அள்ளிவரும்

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்

முத்தென்று ஆர்ப்பரிப்பாள்
விண்மகள்

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்