என் மேகம் ???

Showing posts with label குட்டீஸ் உலகம். Show all posts
Showing posts with label குட்டீஸ் உலகம். Show all posts

Friday, October 8, 2010

எங்க வீட்டு கொலுவிலே....




“அம்மா நம்ம வீட்ல கொலு வைப்போமா?” என்ற கேள்வி சற்றே யோசிக்க வைத்தது. சிறு வயதில் இந்த கேள்வி நாங்கள் கேட்ட பொழுது “அதெல்லாம் நமக்கு வழக்கமில்லை” என்ற பதில் கிடைக்கும். “அம்மா பாட்டு கத்துக்கவா; டான்ஸ் க்ளாஸ் போறேனே”.... எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் கிடைக்கும். யாருக்கு வழக்கம் என்று சொல்லிக்கொள்ள அருகிலேயே இரண்டு மாமிகள் வீடு உண்டு. போய் தெரிந்த இரண்டு பாடல்கள் பாடி சுண்டலோ பொரியோ வாங்கி வருவோம்.

“ஹிந்து, க்றிஸ்டியண்ஸ் முஸ்லீம்-னா என்னம்மா? அவங்க என்ன பேசுவாங்க... ஹிந்தியா, தமிழா, இங்கிலீஷா?”. இந்த கேள்விகளுக்கே மதத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாகி விட்டது, இதில் எதற்கு பண்டிகைகளுக்கு ஜாதியை இழுத்துக் கொண்டு என்று, “கொலு வச்சா தினம் சுண்டல் செஞ்சு பூஜை பண்ணனும், அம்மாவுக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. முடியாதுடா...” என்று தாஜா செய்ய ஆரம்பித்தேன். ”இல்லை, எனக்கு கொலு வேணும்” என்று அடம் தொடங்கியது.

எல்லாம் இந்த பெரிய அமாவாசைக்கு விடுமுறை கொடுத்த பள்ளியால்... அன்று கொலு வைக்கப்படும் நாள் என்றும் மிஸ் சொல்லி இருந்தார்களாம். எனக்கே அன்றுதான் தெரியும் மகாளய அமாவாசைக்கு தான் நவராத்திரி துவங்கும் என்று. சிறுவயதில் எங்கள் அடம் பார்த்து அம்மா சொன்ன ஐடியா தான் குழந்தைகள் வைக்கும் கொலு. வீட்டின் அருகில் காலி இடத்தை சுத்தம் செய்து, மரக்கிளைகளால் பந்தல் செய்து, செங்கல் படிகள் அமைத்து, எல்லோர் வீட்டில் இருந்தும் கொலு பொம்மைகள் கொண்டு வந்து... தினம் ஒருவர் வீட்டில் இருந்து நைவேத்தியம் வைத்து... விளக்கேற்றி என்று ஜாலியாக கொலு வைத்துள்ளோம்.

எனவே அதே முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். “சரி, இடம் தரேன், நீங்களே கொலு வைங்க... தினம் சாயங்காலம் சாமி கும்பிடணும்...சாமிக்கு பொரி, பழம்னு ஏதாவது வைக்கணும். சரியா?, என்றேன். சந்தோஷமாக கொலு தொடங்கியது. இரண்டு அட்டைப்பெட்டிகள் கொலு படிக்கு எடுத்து கொடுத்தேன். புத்தகங்கள் மூன்றாம் படியானது. நான் அலுவலகம் சென்று விட்டேன். மாலையில் அழகான கொலு வீட்டில் இருக்க, “எங்க வீட்டு கொலுவிலே...” என்று பாடல் ஆடல் என்று அமர்க்களப்படுத்தினர் குழந்தைகள்.


Monday, February 23, 2009

எங்க வீட்டுக்கு டெய்ஸி வந்தாச்சு...

குட்டீஸை டிராயிங் கிளாஸ் அனுப்ப ஆரம்பிச்ச உட்னே வீட்டு சுவர் இப்படி ஆய்டுச்சு (யாழினியின் கைவண்ணம்).



ம்ஹும், இதுக்கு கலர் கலரா அடிச்சாலாவது நல்லா இருக்குமே, முடியுமானு நினைச்ச சமயம், முல்லையோட இந்த பதிவு நம்பிக்கை தந்துச்சு. வீட்ல போய் குட்டீஸ்ட்ட நாம் சுவருக்கு பெயிண்ட் அடிக்கலாம்னு சொன்னவுடனே அப்பாவோட போய் பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டாங்க. டோராவை வீட்டுக்குக் கொண்டு வரலாம்னு திட்டமிட்டோம். சரினு முதல்ல ஒரு ட்ரையல் பார்த்தோம். மொட்டை மாடிக்கு போகிற வழில இருக்கிற சுவரைக் கொடுத்தேன். நந்தினி பூ வரைஞ்சு வண்ணம் தீட்டினாள். யாழினியும் தான். நந்தினிக்குப் பிடித்த பின்க் சட்டையும், நீல ஸ்கர்ட்டும் வண்ணம் தீட்டிக் கொண்டன...



அன்னிக்கு அவங்க சித்தப்பா வந்து ஆர்வமாகி அவளோட சேர்ந்து டோராவுக்கு பதிலா டெய்ஸியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. ரொம்ப நாளா தள்ளிப் போன வண்ணம் தீட்டல் நேற்று நிறைவு பெற்றது. இந்த முயற்சில ஒரு தடவை யாழ் நீலவண்ணத்தில் குளிச்சு டர்பண்டெய்ன் தேய்ச்சு குளிச்சாள். எனவே குட்டீஸ் வண்ணம் தீட்டறதை கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஆமைக்கு மட்டும் நந்தினி வண்ணம் தீட்டினாள். மீதி எல்லாம் அவள் அப்பா & சித்தப்பா வேலை. எப்படி இருக்கு? இனி அடுத்து இதை ரூமுக்குள்ள கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம்... எப்ப முடியுமோ தெரியல...






இதுக்கு நடுவில் பெரியவங்களை உற்சாகப்படுத்த குட்டீஸ் செஞ்ச ஒரு "ஷோ" எங்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் நடித்தவர்கள் யாழினி-4 வயது நிவேதா-3 வயது ... எழுத்தும் இயக்கமும் நந்தினி - 10 வயது.
நந்தினி சொல்கிறாள், யாழினி வ்ருகிறாள் ஓரிடத்தில் டினோசர் பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
(இதோ வருகிறாள் சிண்ட்ரல்லா. அவள் ஒரு காட்டில் மாளிகைக்குள் செல்கிறாள். உடனே கதவுகள் மூடுகின்றன (நந்தினி கை தட்டி கதவுகள் மூடும் ஓசை ஏற்படுத்துகிறாள்). அங்கே மான்ஸ்டர்ஸ் இருக்கின்றன (பொம்மைகள்). உடனே "ஸ்னோவைட்" வந்து மான்ஸ்டர்ஸைக் கொல்கின்றாள் (நிவேதா வந்து பொம்மைகளை வெட்டிச் சாய்க்கிறாள்). அவர்கள் தோழிகள் ஆகிறார்கள். "நான் சிண்ட்ரல்லா, உன் பெயர் என்ன?". "நான் ஸ்னோவொயிட்.". "we are friends"
ஷோ முடிகிறது.

அவர்களாக செய்த இந்நாடகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளை engage பண்ண எனக்கு ஒரு வழியும் காட்டியது. இனி எங்கள் வீட்டில் அடிக்கடி குட்டி ஷோக்கள் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.