என் மேகம் ???

Wednesday, November 29, 2006

என் சூரியன்

காற்றில் எழுதினால் கரைந்து விடும் என்று
நீரில் எழுதினால் அழிந்து விடும் என்று
மண்ணில் எழுதினால் ம்றைந்து விடும் என்று
விண்ணில் எழுதினால் விழுந்து விடும் என்று
நெருப்பில் எழுதினால் எரிந்து விடும் என்று
ஏட்டில் எழுதினால் அழிந்து விடும் என்று
உன்னை மனதில் எழுதி வைத்தேன்...

என் நிலவுகள்

கடவுளுக்கு நான் படைத்த மலர்களை
பூமாலையாக்கி எனக்கே தந்தார்...
நீ பிறந்தாய்.