என் மேகம் ???

Friday, September 12, 2008

அம்மா என்னை கவனி...

குழந்தைகள், நம் கவனம் முழுவதும் தங்கள் மீதிருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதம் அழகானது..

*****************

அவளுக்கு ஆறு இதழ் பூ வரைந்து வண்ணமடிக்க கொடுத்து விட்டு , ஒரு பக்கம் படித்து விடலாம் என்று புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஒரு வரி படிப்பதற்குள், "அம்மா நீ ஒரு கலர் அடிப்ப்பியாம் , நான் ஒரு கலர் அடிப்பேனாம்", என்று குரல். சரி என்று, ஒரு வண்ணம் தீட்டி, "ம்... நீ அடி" என்றேன். "நீ ரொம்ப அழகா அடிக்கிறமா... நீ அடி, நான் பார்க்கிறேன்" என்றாள். "நீ நல்ல மேனேஜரா வருவ" என்று வாழ்த்தி வண்ணமடித்தேன். புத்தகம் படிக்காமல் அவளை கவனிக்க இந்த வழிமுறை.


**********************************

"அம்மா, நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"ம்"
"சொல்லும்மா நான் சாக்லேட் சாப்பிடட்டுமா"
"ம்"
"வாயைத் திறந்து பேசும்மா.நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"சரி"

(எதுக்கும் ஒரு மெயில் தட்டிடுங்க (அத்தாட்சிக்கு).. என்று ஆபீஸில் கூறுவது போல் எனக்கு இந்த உரையாடல் தோன்றும்)

**********************************

புத்தகமும் செய்தித்தாளும் கிடந்தது. ஆவலுடன் புத்தகத்தை எடுத்தேன். "அம்மா எனக்கு அந்த புக்-ல் ஒரு முக்கியமான விஷயம் படிக்கணும்". (அவள் படிப்பது எல்.கே.ஜி). செய்தித்தாளைக் கொடுத்தேன். "நான் பேப்பர் படிக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா", என்று என் புத்தகம் பறிக்கப்பட்டது (எனக்கு பேப்பர் படிப்பதில் ஆர்வமில்லை என்று அவளுக்குத் தெரியும்).

*********************************
கொஞ்சம் செய்தித்தாளில் படம் காட்டி ஆர்வம் உண்டாக்கினால் , செய்தித்தாள் படிக்கும் பொழுது பறிக்கும் பழக்கத்தைத் தடுக்கலாம் என்று என் கணவர், அவளை அருகில் இருத்தி, படம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். "அப்பா, கண்ணை மூடிக்கங்க, நான் ஒரு சர்ப்ப்ரைஸ் காட்டறேன்" என்றாள். அவரும் செய்தார். செய்தித்தாள், பழையவை சேகரிக்கப்படும் இடத்திற்கு மாறியது தான் அவள் கூறிய "சர்ப்ப்ரைஸ்"

*********************************

வீட்டில் இருந்தால் எனனை கவனி என்பது தான் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் செய்தி.

1 comment:

Anonymous said...

வீட்டில் என் மழலை மகளோடு விளையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன உங்கள் எழுத்துக்கள்.... வெகு சுவாரஸ்யம்