என் மேகம் ???

Wednesday, January 21, 2009

மழலை இன்பம்

உன் சிரிப்பினில்
நான் சிலிர்க்கிறேன்



உன் கைகொட்டலில்
நான் கரைகிறேன்




உன் மழலையில
நான் மயங்குகிறேன்




உன் கோபத்தில
நான் கலங்குகிறேன்




உன் பசியில்
நான் பரிதவிக்கிறேன்



உன் அழுகையில்
நான் உருகுகிறேன்




உன் விளையாட்டில்
நான் திளைக்கிறேன்



உன் தூக்கத்தை
நான் இரசிக்கிறேன்



உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்



(படங்கள் : இணையம்)

17 comments:

அ.மு.செய்யது said...

இனிமையான ரெட்டைவரி கவிதைகள்...

இந்த படங்களை போட்டுவிட்டாலே போதுமே..கவிதை எழுத வேண்டுமா என்ன ??

அருமை அமுதா !!!!

ராமலக்ஷ்மி said...

மழலை இன்பம்
மறுபடி பொங்குது
மருமகனைக் கண்டு
சரியா அமுதா:)?

அழகு வரிகள் படங்களைப் போலவே!

நட்புடன் ஜமால் said...

அழகான படங்கள்

அழகான வரிகளோடு ...

நட்புடன் ஜமால் said...

\உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்\\

இது ரொம்ப பிடித்தது ...

pudugaithendral said...

உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் என்னை இழக்கிறேன்//

அருமையான வரிகள்.

கலக்கறீங்க. வாழ்த்துக்கள்.

அமுதா said...

/*இந்த படங்களை போட்டுவிட்டாலே போதுமே..கவிதை எழுத வேண்டுமா என்ன ??*/
நன்றி அ.மு.செய்யது. மழலை எவ்வளவு பார்த்தாலும், எழுதினாலும், பேசினாலும் அருமைதான்.

அமுதா said...

/*மழலை இன்பம்
மறுபடி பொங்குது
மருமகனைக் கண்டு
சரியா அமுதா:)? */
உண்மை ... உண்மை...

அமுதா said...

/*அழகான படங்கள்
அழகான வரிகளோடு ... */

நன்றி ஜமால்

அமுதா said...

நன்றி முல்லை
நன்றி திகழ்மிளிர்
நன்றி புதுகைத் தென்றல்

அப்துல்மாலிக் said...

ரெட்டை வரிகளில்
பல காவியங்கள்...

அப்துல்மாலிக் said...

//உன் பசியில்
நான் பரிதவிக்கிறேன்//

ஒவ்வொரு தாய்க்கும் உள்ள
உண்மையான......
வாழ்த்துக்கள் அமுதா

அமுதா said...

நன்றி அபுஅஃப்ஸர்

நானானி said...

மழலை அமுதத்தை அமுதாவின் வார்த்தைகளில் அள்ளிப் பருகினேன்.
ஆனால் பருகப்பருக திகட்டாததல்லவோ அவ்வமுதம்!!!!!

அமுதா said...

//நானானி said...
மழலை அமுதத்தை அமுதாவின் வார்த்தைகளில் அள்ளிப் பருகினேன்.
ஆனால் பருகப்பருக திகட்டாததல்லவோ அவ்வமுதம்!!!!!

நன்றிங்க... ஆமாம்... பருகப் பருகத் திகட்டாத அமுதம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

திருக்குறள் கதைதான் எழுதறீங்கன்னு பார்த்தா, வள்ளுவர் மாதிரியே ரெண்டு அடியில கவிதையெல்லாம் எழுதி அசத்தறீங்க.

ம், வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

அடடா...இவ்ளோ நாள் உங்க வலைப்பூ பக்கம் வராம போய்ட்டேனே....அருமையான வரிகள்...நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்!


(வலைப்பூ முகவரி தந்த ஆயில்ஸ் அண்ணாவிற்கு நன்றி!)

Muthusamy Palaniappan said...

அருமை..!