என் மேகம் ???

Thursday, April 2, 2009

மழலை சிரிப்பு

பொக்கை வாய்ப் புன்னகையில்
பொக்கே களை இழந்தது




உன் புன்னகை நிலவோ
அலை போல் பொங்குது மனம்




உன் புன்னகையின் மலர்ச்சியில்
வாடித் தெரிந்தன மலர்கள்




ஆதவனைத் தேடும் சூரியகாந்தி
இப்பொழுது உன்னைத் தேடுகிறது




உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது





உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்





எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உன் புன்னகை தந்த நிம்மதி

10 comments:

ஆ.சுதா said...

//உன் புன்னகையில் தான்
எனக்கு உலகம் ஒளிர்கிறது/

//உன் புன்னகையின் வாசம்
எவர் மனதினையும் மயக்கும்//

//எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உன் புன்னகை தந்த நிம்மதி //

அழகாக உள்ளது

ஆயில்யன் said...

பூக்களின் மத்தியில்

மழலைப்பூ

சின்னஞ்சிறு கண்கள் அனைவரையும் ஈர்க்கும்

என்றோ கண்ணாடி அணிந்திருக்கிறாரோ....! :))))

கலக்கலான படமும் கூட..!

சந்தனமுல்லை said...

படங்களும் அழகு..உங்கள் சொல்லோவியமும அழகு!

நட்புடன் ஜமால் said...

அத்தனையும் அழகு


\\பொக்கை வாய்ப் புன்னகையில்
பொக்கே களை இழந்தது
\\

இது மிக அழகு

வல்லிசிம்ஹன் said...

எங்கய்யா பிடிக்கிறீங்க இத்தனை அழகான படங்களை. உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதேன்னு பாடணும்னு ஆசையா இருக்கு. பாப்பாக்கள், படம்,பாட்டு எல்லாமே ஜோர்.

அகநாழிகை said...

பதிவு அருமை.
படங்களும் அழகு.

Dhiyana said...

வரிகளுக்கு ஏற்ற படங்கள் அருமை.

ஆதவா said...

நல்லா இருக்குங்க..... மழலை கவிதைகள்!!!!

ஆதவன் னு என் பெயரைப் போட்டிருக்கீங்க???? ஹிஹி... எல்லாம் ஒரு விளம்பரம்தான்!!!

தமிழ் அமுதன் said...

எப்புடிங்க ........இப்புடி? ;;)))

Unknown said...

அத்தனை வரியும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை..அருமை..