என் மேகம் ???

Thursday, December 17, 2009

கோலங்கள்



சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்




இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்




பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்




வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்




மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம




எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...



<படங்கள் இணையம்>

18 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசிவரிகளில் சொன்னதுபோல் குழந்தiைகள் வரையும் கோலத்துக்கு ஈடு இணை இல்லை ..

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க...!

ராமலக்ஷ்மி said...

மனதைக் கவர்ந்தபடியே வந்த முந்தைய கோலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியேதான் விட்டது கடைசியாக நீங்கள் சொன்ன..
//குழந்தையின் அசைவுகள்
தீட்டிய// கோலம்.

அருமை அமுதா!

sathishsangkavi.blogspot.com said...

//மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம//

கவிதையும், படங்களும் அழகு....

அ.மு.செய்யது said...

மார்கழி மாதத்தில் அழகான கவிதைக் கோலம் !!!

நிறைய வண்ணங்களோடு !!!

பூங்குன்றன்.வே said...

//எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...//

உண்மை தான்..கவிதைகளும்,படமும் கொள்ளை அழகு குழந்தையின் கோலம் போலவே ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய், அழகா இருக்கு அமுதா.

ஹேமா said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகான கோலங்களோடு அமுதா.அழகு.

தமிழ் said...

அற்புதம்

தமிழ் அமுதன் said...

ஆஹா ..!எல்லாவற்றையும் தொகுத்து நீங்கள் போட்ட கோலமே அழகு...!

அண்ணாமலையான் said...

குழந்தையின் அசைவுகள் கோலம் என்றால், குரல் ராகம் சரிதானே?.. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்க...

Anonymous said...

அழகோ அழகு

நட்புடன் ஜமால் said...

குழந்தையின் நேசிப்பில்
அழகு படுத்தபடுகின்றது எங்கள் வாசிப்பு

Unknown said...

அட இது என்ன கோலம்

அரங்கப்பெருமாள் said...

படங்கள் மற்றும் கவிதை அருமை.

//எதுவும் ஈடாகவில்லை// ஏனெனில் அது உயிர்க் கோலம்.

ஆமா.. ’கோலங்கள்’ தொடர் முடிஞ்சு போச்சுன்னு சொன்னாங்க. நீங்க இப்பதான் ஆரம்பிச்சிருக்கீங்க.

மகா said...

இவ்ளோ கோலம் இருக்குதா ?.....

பின்னோக்கி said...

முழுவதும் படிக்கவில்லை.
அடுத்த வார ஆனந்த விகடனில் படித்துக்கொள்கிறேன்.

அமுதா said...

நன்றி வசந்த்
நன்றி ராமலஷ்மி மேடம்
நறி சங்கவி
நன்றி செய்யது
நன்றி பூங்குன்றன்
நன்றி அமித்து அம்மா
நன்றி ஹேமா
நன்றி திகழ்
நன்றி ஜீவன்
நன்றி அண்ணாமலையான்
நன்றி முல்லை
நன்றி சின்ன அம்மிணி
நன்றி ஜமால்
நன்றி மோகன்
நன்றி அரங்க பெருமாள்
நன்றி மகா
நன்றி பின்னோக்கி (கோலங்கள் முடியுதுனு போனவாரமே ஆ.வில போட்டுட்டானே!!! மறுபடியும் எதுக்கு கோலங்கள் போடுவாங்க?)

Deepa said...

//ஆஹா ..!எல்லாவற்றையும் தொகுத்து நீங்கள் போட்ட கோலமே அழகு...!//

repeatttt!