என் மேகம் ???

Saturday, August 15, 2009

எங்கள் இளவரசிக்குப் பிறந்தநாள்

இளம் ரோஜாவின் நிறத்தோடு, கண்விரிய நாவை நீட்டி மலர்ந்த கண்களுடன் பார்த்த குழந்தையை அரை மயக்கத்தில் கண்ட நினைவு இன்னும் பசுமையாக....வண்ணமயமான உலகில் நான் நுழைவதை உணர்த்தினாள் அந்த இளவரசி. சட்டென்று அவள் என் உலகமானாள்...இன்று விரிந்து கொண்டிருக்கிறது அவள் உலகம்... பரிவு காட்டும் தாயாக, கொஞ்சி விளையாடும் குழவியாக, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்யும் பொறுப்பான மகளாக, நற்குணங்களின் வெளிப்பாட்டில் போதிக்கும் ஆசானாக... பெண்ணே!!! என்ன தவம் செய்தேனோ உனை நான் ஈன்றிடவே!!!!

எங்கள் இளவரசி...
சின்ன சின்ன பூ பாதம் பதித்து
பூவுலகில் பதித்த நாள்

அவள்...
கண்மலர்ந்து எங்களை
முகம் மலர வைத்த நாள்

அவள்...
அழுகையின் ஒலியிலே எங்கள்
சிரிப்பொலி கேட்ட நாள்

வாழ்வின் அர்த்தங்களை
உணரத் தொடங்கிய நாள்
மீண்டும்...
அழகாக மலர்கிறது
உறவுகளின் , நட்புகளின்
வாழ்த்துக்களின் வாசத்துடன்...

எப்பொழுதும் போல் மாமாவின் நினைவும் சேர்ந்து கொள்கின்றது. உடல் நலக் குறைவால் ஒரு முறை தவிர, இவளின் அனைத்து பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அவர் இருந்தார். சென்ற ஆண்டில் இருந்து இல்லாமல் போனது மனதைக் கனக்கச் செய்கின்றது.

சென்ற ஞாயிறு ப்ராத்மிக் பரீட்சைக்கு கிளம்பியவளிடம் "சாமியை வேண்டிக்கொள்" என்றவுடன் "ஷோகேஸ்" முன்பு நின்றாள். "சாமி ரூமுக்கு போ" என்று சொல்ல வந்தவள் சட்டென்று உணர்ந்தேன் அவள் மாமாவின் படத்தின் முன் நிற்பதை. அன்றே, செம்பருத்திப் பூவை ஆசையுடன் கொடுத்த குட்டிப் பெண்ணிடம் "சாமிக்கு வை" என்ற பொழுது அவளும் ஷோகேஸில் மாமா படத்தில் பூ வைத்த பொழுது மனம் நெகிழ்ந்தது. இவர்களை அன்பும் ஆசையுமாக மார் மீதும், தோள் மீதும் சீராட்டி வளர்த்தவர் இறையாக நின்று அவளை வாழ்த்துவார் என்ற நம்பிக்கையுடன் நந்தினி என்றழைக்கப்படும் எங்கள் இளவரசிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

26 comments:

அரங்கப்பெருமாள் said...

வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.அனைத்து தேவைகளையும் அவன் பூர்த்தி செய்வான்.

தமிழ் அமுதன் said...

நந்தினிக்கு எங்கள் குடும்பத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

ஆயில்யன் said...

நந்தினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்

தமிழ் said...

இளவரசிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

அவள்...
அழுகையின் ஒலியிலே எங்கள்
சிரிப்பொலி கேட்ட நாள்]]

ரொம்ப நெகிழ்வான நேரம் ...

G3 said...

Nandhinikku engaloda vaazhhtukkalum :)

ராமலக்ஷ்மி said...

நந்தினிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பரவசத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் எங்களையும் மகிழ வைக்கிறது. நந்தினிக்கு அவள் தாத்தாவின் ஆசிகள் எப்போதும் உடனிருக்கும்.

அ.மு.செய்யது said...

சுதந்திர தினத்தில் பிறந்த உங்கள் அன்பு இளவரசிக்கு எங்கள் பிலேடட் விஷஸ்.

அமுதா said...

நன்றி Arangaperumal
நன்றி ஜீவன்
நன்றி ஆயில்யன்
நன்றி வசந்த்
நன்றி திகழ்மிளிர்
நன்றி ஜமால்
நன்றி காயத்ரி
நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி செய்யது

சந்தனமுல்லை said...

நந்தினிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன்.

அமுதா said...

நன்றி முல்லை.
நன்றி அப்துல்லா

Dhiyana said...

நந்தினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

அமுதா said...

நன்றி தீஷு

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நந்து

ஹேமா said...

பிந்தினாலும் நந்தினியம்மாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அமுதா said...

நன்றி அமித்து அம்மா
நன்றி ஹேமா

"உழவன்" "Uzhavan" said...

நந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(கொஞ்சம் லேட் ஆயிடுச்சி)

அமுதா said...

நன்றி உழவன்

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Deepa said...

Sorry... this wish is really late, but it comes with a double dose of love and affection.

Belated Birdhday wishes Nandhu dear...

Lots of love,
Neha * Neha's amma

அமுதா said...

நன்றி சென்ஷி
நன்றி தீபா

குடந்தை அன்புமணி said...

நந்தினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வளங்கள் யாவும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

சத்ரியன் said...

வணக்கம் அமுதா,

வாழ்த்துகள்! உங்கள் இளவரசிக்கு!

//செம்பருத்திப் பூவை ஆசையுடன் கொடுத்த குட்டிப் பெண்ணிடம் "சாமிக்கு வை" என்ற பொழுது அவளும் ஷோகேஸில் மாமா படத்தில் பூ வைத்த பொழுது மனம் நெகிழ்ந்தது.//

உலகிற்கு இறைவன் எப்படி வந்திருப்பான் என்ற என் நெடுநாளைய உறுத்தலுக்கு விடிவு வந்தது உங்கள் இளவரசியின் இறைவணக்கத்தால்...!

அமுதா said...

நன்றி அன்புமணி
நன்றி சத்ரியன்