என் பேரு சக்கு... சகுந்தலானு சொன்னா யாருக்கும் தெரியாது. தலைப்பைப் பார்த்து ஆபீஸ்ல உத்யோகம்னு நினைச்சுடாதீங்க... நான் வீட்டு வேலை பார்க்கற ஆளு. அப்புறம்னு கேக்கறீங்களா, என் ஆபீஸ் உத்யோகம் பத்தி சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி செல்வி பத்தி சொல்லணும்.
செல்வி ஒட்டு உறவெல்லாம் கிடையாது... என் சிநேகிதி. சின்ன வயசு சிநேகமும் கிடையாது. ஒரு நாலஞ்சு வருஷப் பழக்கம் ... அவ்வளவுதான். அதுக்குள்ள நகமும் சதையுமா பழகிட்டோம். அவ புதுசா எங்க பேட்டைக்கு குடி வந்தாள்... நல்ல சிரிச்ச மூஞ்சி, நைச்சியமான பேச்சுனு எனக்கு பிடிச்சு போச்சு. என்னவோ ஒரு பாசம்... நிறைய உதவி செய்வேன். அதெல்லாம் சொல்ல வரலை...அவளும் நல்லா தான் பழகுவாள்... அப்பப்ப கொஞ்சம் வியாபார புத்தியைக் காட்டுவானாலும் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன்...
ம் அவ ஒண்ணும் வியாபாரி இல்லை... என்னை மாதிரி வீட்டு வேலை செய்யறவ தான்.. அப்பப்ப கையில காசு இருந்தால் அப்பளம், துணினு இங்கிட்டு வாங்கி அங்கிட்டு வித்துடுவா. அவசரத்துக்கு என்கிட்ட கைமாத்து வாங்கினால் உடனே கொடுக்காமல் புது சேலையைக் கட்டிட்டு வந்து அழகா இருக்கானு கேட்பாள். அடுத்த மாசம் திருப்பி கொடுக்கறேம்பா. அடுத்த மாசம் துணில காசைப் போட்டுட்டு "கொஞ்சம் இருக்கா, காசு புரட்டிடறேன்" அப்படீம்பா. அந்த காசை இட்லிகடை ஆயாவுக்கு நான் கடனா கொடுத்திருந்தா மாசம் ஒரு தரம் இட்லியாவது தரும். இவ என் காசை வச்சிட்டு வியாபாரம் பண்ணுவாள்... நான் கம்னு இருப்பேன்... அதென்னவோ மனசுல தோணினாலும் கண்டுக்காமல் இருப்பேன். ஆனால் காசைக் கரெக்டா திருப்பி கொடுத்துடுவா.
சரி.. இப்ப என்ன அவளுக்குங்கறீங்க... நான் யமுனாக்கா வீட்ல வேலை பார்த்துட்டு இருந்தேனா... அந்த அக்கா என்னை அவங்க வேலை பார்க்க்ற ஆபீஸ்ல சேர்த்து விட்டாங்க. எனக்கும் ஆபீஸ் உத்யோகம் கிடைச்சுது... உத்யோகம் என்ன உத்யோகம்... அதே பெருக்கறதும் தொடைக்கறதும் தான்.. ஆபீஸ் போறேன்னு சொல்லிக்கலாம். இப்ப செல்விக்கு ஆபீஸ் ஆசை வந்துடுச்சு. "யக்கா... அந்தம்மாட்ட சொல்லி எனக்கொரு வேலை போட்டு கொடுக்க சொல்லேன்" அப்படீனு ஆரம்பிச்சுது. எனக்கு சங்கடமா போச்சு. யமுனாக்காக்கு செல்வியை ஏனோ பிடிக்காது "அவ பேச்சும், பார்வையும்... ரொம்ப தளுக்கா பேசறா...எனக்கு பிடிக்காது" அப்படீனு சொல்லி வீட்டு வேலைக்கே அவளை எடுத்துக்கலை. இதை அவகிட்ட சொல்லி மனசைக் கஷ்டப்படுத்த இஷ்டமில்லாமல், நேரம் கிடைக்கிறப்ப யமுனாக்காகிட்ட சொல்லி பார்க்கலாம்னு இருந்தேன்.
ஒரு நாள் பார்த்தால் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாமேனு வெளிய நின்னுட்டு இருந்தது. அன்னிக்கு யமுனாக்காவை வழில பார்த்தேன். "யக்கா... நம்ம செல்வி வந்துருக்கு. நல்ல பொண்ணு தான். உங்க ஊர்ப்பக்கம் தான் அது. பேச்சு இருந்தாலும் வீட்ல பிக்கல் பிடுங்கல் கிடையாது ஒழுங்கா வேலைக்கு வரும்னேன்". அக்கா சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க. அதுக்கு வேலை கிடைச்சிடுச்சு. அட!!! ஒரே இடம் வேலை; எனக்கு ஒரே சந்தோஷம்... மறு நாள் அவளைப் பார்க்கறேன்; மூஞ்ச வெடுக்குனு வெட்டிகிட்டு போறாள். எனக்கு ஒண்ணும் புரியல... சரி வேலை கிடைச்ச பவுசுனு விட்டுட்டேன்.
சிரிச்ச மூஞ்சியா தெரிஞ்ச முகம் விடியா மூஞ்சியா மாறிடிச்சு. தினம் அது கூட முகத்த தூக்கி வச்சுட்டு வேலை செய்ய வேண்டியதா போயிடிச்சு. ஒரு நாள் மனசு கேக்காம "ஏண்டி செல்வி என்ன ஆச்சு உனக்கு?" அப்படீனேன். அவ்ளோதான் "வெளங்குவியாடீ நீ.. எனக்கு வேலை கிடைக்க கூடாதுனு என்ன மாய்மாலம் பண்ணின... எனக்கு இந்த ஊரு இல்ல... பிக்கல் பிடுங்கல் கிடையாதுனு சொன்னியாமே!!! இதெல்லாம் சொன்னால் இவ அடிக்கடி ஊருக்குப் போய்டுவாள், சொகுசுக்காரி வேலைக்கு வர மாட்டானு வேலை தர மாட்டாங்கனுதான செஞ்ச...நீயெல்லாம் ஒரு பொம்பளைனு பழகினேன் பாருனு" காறி துப்பிட்டாள்.
எனக்கு யார் கூடயும் சண்டை போட பிடிக்காது. நல்லது செய்யப் போய் இப்படி பேச்சு வாங்கினதுல மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இப்படி செஞ்ச உதவி எல்லாம் மறந்து எப்படி பழிபோடறானு மனசு தவிச்சுது... எனக்கும் காறித் துப்பத்தெரியும். போய் தொலையுதுனு விட்டுட்டேன். தினம் முகத்துல முழிக்கறது விதி... இனி ஜென்மத்துக்கும் புது சிநேகிதம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இது தான் கதையானு கேக்கறீங்களா? கடைசியா ஒண்ணு சொல்லணும். இரண்டு மாசத்தில ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. ரெண்டு பேரும் திரும்ப வீட்டு வேலை தான் செய்யறோம். இப்ப நான் இருக்கேன், செல்வி இருக்கா, எங்க மனக்கசப்பு இருக்குது ஆனால் மனக்கசப்புக்கு காரணமான ஆபீஸ் உத்யோகம் தான் இல்ல.
என் மேகம் ???
Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts
Monday, July 26, 2010
Friday, January 8, 2010
டிசிப்ளின்
விநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா? வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் "டிசிப்ளின்" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.
வால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், "வாங்க மாமா!!! எப்படி இருக்கீங்க?" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே "அடடே!!!" என்றார். "நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.
மாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் "டிசிப்ளின்" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.
மெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். "அடடே!!! பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா?" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். "டிபன் டிசிப்ளின்" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.
மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை "கொய்யாப்பழம்" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். "அடடே!!!" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். "அடடே!!" "பழத்த கழுவாமல் சாப்பிடலாமா? இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா", என்றார்.
வந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். "டிசிப்ளின்" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். "போய் விளையாடு" என்றார். "இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...
அவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா "விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.
வால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், "வாங்க மாமா!!! எப்படி இருக்கீங்க?" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே "அடடே!!!" என்றார். "நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.
மாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் "டிசிப்ளின்" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.
மெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். "அடடே!!! பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா?" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். "டிபன் டிசிப்ளின்" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.
மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை "கொய்யாப்பழம்" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். "அடடே!!!" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். "அடடே!!" "பழத்த கழுவாமல் சாப்பிடலாமா? இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா", என்றார்.
வந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். "டிசிப்ளின்" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். "போய் விளையாடு" என்றார். "இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...
அவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா "விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.
Tuesday, August 18, 2009
அப்பாவின் நிழற்படம்
அவன் கையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அப்பாவைப் படத்தில் மட்டும் தான் காண முடியும் என்ற எண்ணம் மனதைக் கலக்கியது. ஊரில் வேலை பார்த்தபொழுதும் சரி, ஊரை விட்டு வந்த பொழுதும் சரி அவனுக்கு அவர் அமைதியாக உறுதுணையாக இருந்தார். நடுவில் வேலையை விட்டு ஏதோ படித்தபொழுதும் கேள்வி கேட்காது செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாள் ஏதோ துர்க்கனவு என்று அவனைக் காண பஸ்ஸில் வந்து விடியற்காலையில் நின்றது நினைவிற்கு வந்தது. "எனக்கு ஏன் அப்படி ஒன்றும் தோன்றவில்லை" என்ற கேள்வி உதித்தது. இது ஒரு துர்க்கனவாக மறைந்திடாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. அம்மாவை நினைத்து மனதில் பாரம் ஏறியது.
படத்தில் அப்பாவின் முத்திரைச் சிரிப்பு பதிந்திருந்தது. "ராஜா" என்று அப்பா அழைப்பது போல் இருந்தது. நடராஜன் என்ற அவனை எல்லோரும் நட்டு, நட்ராஜ் , ராஜ் , ராஜா என்றும் அழைப்பார்கள். என்றாலும், அப்பா அழைக்கும் "ராஜா" எத்தனை தனித்தன்மையுடையது என்று இப்பொழுது தோன்றியது. அப்பாவின் அருகில் நிற்க வேண்டும் போல் இருந்தது.
"கவி, இந்த போட்டோவை பெரிசா பண்ணி ஹால்ல மாட்டப் போறேன்", என்றான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். உடனே நெகடிவ்வை எடுத்துக் கொண்டு கிளம்பினான். குடும்பத்துடன் பல படங்கள் இருந்தாலும், பெரிது படுத்தும் அளவுக்கு எதுவும் தேறவில்லை. எதற்காகவோ எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் படம் மட்டும் தான் கொஞ்சம் பெரிது படுத்தும் அளவுக்கு இருந்தது.
கடையில் அவன் எதிர்பார்த்த அளவு பெரிது பண்ண ரிசொல்யூஷன் இல்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அளவிற்கு அடுத்த பெரிய அளவு சொன்னான். தேவைப்பட்டால் கிராபிக்ஸில் சில தொடுதல்கள் பண்ணுவதாகக் கூறினார்கள்.
மறு நாள் படத்தை வாங்கிப் பார்த்தபொழுது நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது "ரிசொல்யூஷனுக்காக" சில இடங்களில் டச்சப் செய்திருந்தது தெரிந்தது. மீசை முழுமைபெற்று அப்பா சற்று இளமையாகத் தெரிந்தார்... அவனுக்கு வேறு யாரையோ பார்ப்பது போல் இருந்தது. "இல்லை கவி...அப்பாவைப் பார்க்கிற மாதிரி இல்ல... அந்த படத்தில் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. நான் போய் மாத்திட்டு வந்திடறேன்", என்று கிளம்பிச் சென்றான்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவனிடம், "என்ன மாத்த சொல்லிட்டீங்களா?" என்றாள். "ம்... அவர்கிட்ட சொன்னேன்; அந்த படம் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. இது அப்படி இல்லை. அதே மாதிரி எந்த அளவுல நல்லா இருக்குமோ, அந்த அளவுக்கு பெரிசுப்படுத்த சொன்னேன். அவர் புரியுது தம்பினு சொல்லி நாளைக்கு வரச் சொன்னார்" என்ற பொழுது அவன் கண்கள் கலங்கி இருந்தன.
திடீரென்று ஒரு நாள் ஏதோ துர்க்கனவு என்று அவனைக் காண பஸ்ஸில் வந்து விடியற்காலையில் நின்றது நினைவிற்கு வந்தது. "எனக்கு ஏன் அப்படி ஒன்றும் தோன்றவில்லை" என்ற கேள்வி உதித்தது. இது ஒரு துர்க்கனவாக மறைந்திடாதா என்ற ஏக்கம் சூழ்ந்தது. அம்மாவை நினைத்து மனதில் பாரம் ஏறியது.
படத்தில் அப்பாவின் முத்திரைச் சிரிப்பு பதிந்திருந்தது. "ராஜா" என்று அப்பா அழைப்பது போல் இருந்தது. நடராஜன் என்ற அவனை எல்லோரும் நட்டு, நட்ராஜ் , ராஜ் , ராஜா என்றும் அழைப்பார்கள். என்றாலும், அப்பா அழைக்கும் "ராஜா" எத்தனை தனித்தன்மையுடையது என்று இப்பொழுது தோன்றியது. அப்பாவின் அருகில் நிற்க வேண்டும் போல் இருந்தது.
"கவி, இந்த போட்டோவை பெரிசா பண்ணி ஹால்ல மாட்டப் போறேன்", என்றான். அவள் சரி என்பது போல் தலையை ஆட்டினாள். உடனே நெகடிவ்வை எடுத்துக் கொண்டு கிளம்பினான். குடும்பத்துடன் பல படங்கள் இருந்தாலும், பெரிது படுத்தும் அளவுக்கு எதுவும் தேறவில்லை. எதற்காகவோ எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் படம் மட்டும் தான் கொஞ்சம் பெரிது படுத்தும் அளவுக்கு இருந்தது.
கடையில் அவன் எதிர்பார்த்த அளவு பெரிது பண்ண ரிசொல்யூஷன் இல்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அளவிற்கு அடுத்த பெரிய அளவு சொன்னான். தேவைப்பட்டால் கிராபிக்ஸில் சில தொடுதல்கள் பண்ணுவதாகக் கூறினார்கள்.
மறு நாள் படத்தை வாங்கிப் பார்த்தபொழுது நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது "ரிசொல்யூஷனுக்காக" சில இடங்களில் டச்சப் செய்திருந்தது தெரிந்தது. மீசை முழுமைபெற்று அப்பா சற்று இளமையாகத் தெரிந்தார்... அவனுக்கு வேறு யாரையோ பார்ப்பது போல் இருந்தது. "இல்லை கவி...அப்பாவைப் பார்க்கிற மாதிரி இல்ல... அந்த படத்தில் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. நான் போய் மாத்திட்டு வந்திடறேன்", என்று கிளம்பிச் சென்றான்.
சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவனிடம், "என்ன மாத்த சொல்லிட்டீங்களா?" என்றாள். "ம்... அவர்கிட்ட சொன்னேன்; அந்த படம் அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. இது அப்படி இல்லை. அதே மாதிரி எந்த அளவுல நல்லா இருக்குமோ, அந்த அளவுக்கு பெரிசுப்படுத்த சொன்னேன். அவர் புரியுது தம்பினு சொல்லி நாளைக்கு வரச் சொன்னார்" என்ற பொழுது அவன் கண்கள் கலங்கி இருந்தன.
Subscribe to:
Posts (Atom)