என் மேகம் ???

Sunday, May 29, 2011

என்ன லாஜிக்கோ?

வழியெங்கும் அம்மா படத்தைப் பார்த்தவுடன் குட்டிப்பெண்ணிற்கு சந்தேகம், “பழைய சீப் மினிஸ்டர் என்ன செய்வாங்க?”. அவங்க வீட்ல் இருப்பாங்க என்று சொல்லிவிட்டு,” நீயும் அக்காவும் சண்டை போடற மாதிரி அவர் கட்டின ஆபீசுக்கு இவங்க வரமாட்டேனுட்டாங்க. கோடிக்கணக்குல பணம் வேஸ்ட்” என்றோம். ”அய்யோ இவ்ளோ பணம் வேஸ்ட் பண்ணிணால் அப்புறம் அவங்களால எதுவும் வாங்க முடியாது” என்றாள். அப்புறம் டாக்ஸ் பற்றி நாங்க அவளுக்கு சொல்லி ஒரு ஒரு மணி நேரம் கேள்வி பதில் தான். பிடிக்குதோ பிடிக்கலயோ புது ஆபீசுக்கு போய் வேலை பாக்க வேண்டியது தானே என்று முடித்தாள்.

**********************************************************************

பாப்பா ஸ்கூல்ல இங்கிலீஷ்ல் பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா என்றோம். “டமில் நாட்” என்றாள்

***********************************************************************


காரில் பின்சீட்டில் தான் பயணம் செய்வாள் குட்டிப் பெண். ஏன் என்று கேட்டதில்லை. அவள் மாமாவுடன் தனியாக சென்றாள். முன்சீட்டில் உட்காரச் சொன்னதற்கு மறுத்து விட்டாள். ஆக்ஸிடண்ட் ஆனால் முன்சீட்டில் இருந்தால் கதவைத் திறக்க முடியாதாம். பின் சீட் என்றால் திறக்கலாமாம். என்ன லாஜிக்கோ? இப்ப ஆக்ஸிடண்ட் ஆனால் என்ன செய்ய என்று கேட்டதற்கு, போன் பண்ணி எங்கம்மாவை வரச் சொல்லி என்னை விட்டுடுங்க, நீங்க காரை சர்வீஸ் பண்ணிட்டு எடுத்துட்டு வாங்க என்றாளாம்.

************************************************************************

Wednesday, May 18, 2011

ட்வீட்ஸ்

கதையை விட சுவாரஸ்யமானது குழந்தை கதை கேட்கும் அழகும் , கேள்விகளும்....

நிலவைப் பிடிக்கத் துடித்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் முடிவில் ஓய்வதென்னவோ மண்ணின் மடியில் தான்

நிழலை நிஜம் என்று எண்ணினால் மூன்றாம் பரிமாணம் இருப்பதே தெரியாது.

துறுதுறுவென சுற்றும் குழந்தையின் காலடியில் அலைகள் கூட ஓய்ந்து போகின்றன

காற்று கூட இல்லாத தனிமை கோடை காலத்து இரவுகளில் நிச்சயம் கிடைக்கும் #அக்னி நட்சத்திரம்

”லட்சம்” சாதாரணமானது, பின் ”கோடி” பின் , “லட்சம் கோடி” .. #ஆத்திகமோ நாத்திகமோ இந்த விஷயத்தில் நல்ல ஒற்றுமை....

”சார் தந்தி” என்ற முன்னெச்சரிக்கை, தொலைபேசியில் வரும் மரணச் செய்தியில் இருப்பதில்லை

புதிதாய் வரும் உறவுகள் மனதின் இளமையை உணரச் செய்கின்றன... பழைய உறவுகளின் பிரிவு முதுமை நோக்கிய் பயணத்தை உணரச் செய்கின்றன

காலம் செல்ல செல்ல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம்

அறிவியலுடன் முட்டிக் கொண்டிருந்த குட்டிப்பெண்ணிடம் “நைட் ஏன் வருது?’ “மூன் வர்றதால...” #எல்லாமே இப்படி சிம்பிளாக இருந்தால் நன்றாக இருக்கும்

காலம் காலமாக ஓயாமல் ஆர்ப்பரிக்கும் இந்த கடல் அலைகள் என்ன தான் சொல்ல வருகின்றன?

நிலவின் ஒளியை மறைக்க முயலும் மேகமும் ஒளிர்கிறது நிலவின் ஒளியில்...

நிம்மதியான வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றும் வலிமை இயற்கைக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...