என் மேகம் ???

Tuesday, September 29, 2009

இன்பத்தைத் தேடி...

இளம்வெயிலை அனுப்பி
புன்னகை பரப்பினான்
காலை இளஞ்சூரியன்

மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு
மென்மையாகக் கடந்தது
மெல்லிய இளங்காற்று

ஆனந்தத்தைத் தெளித்து
அள்ளச் சொன்னது
குழந்தையின் சிரிப்பு

எதையும் கவனிக்காமல்
இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்!!!

10 comments:

ராமலக்ஷ்மி said...

//எதையும் கவனிக்காமல்//

இதை இதை இதையேதான் நானும் அடிக்கடி வலியுறுத்தியபடி என் கவிதைகளில்..

//இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்//

அருமையான வரிகள்.

பின்னோக்கி said...

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்..இளஞ்சூரியன்றீங்களே அத நீங்க பார்த்திருக்கீங்களா ?? உண்மைய சொல்லனும் :)

மத்தபடி வழக்கம் போல கவிதை சூப்பர்.

கோமதி அரசு said...

ஆம் நீங்கள் சொல்வது உண்மை.

நெஞ்சை அள்ளும் சிரிப்போடு அள்ளத்தான் சொல்லும் குழந்தையின் சிரிப்பு.

கவிதை அருமை.

Admin said...

நல்ல வரிகள்...
வாழ்த்துக்கள்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

nice

அரங்கப்பெருமாள் said...

உண்மை... வாழ்க்கை இப்படியேப் போகுதே...

Deepa said...

எவ்வளவு உண்மை.
அருமை அருமை!
:)

தமிழ் said...

அருமை

Gobenath said...

கவிதை நன்றாக இருந்தது

"உழவன்" "Uzhavan" said...

கையில வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையுற மாதிரியா.. நல்ல கருத்து