என் மேகம் ???

Wednesday, July 29, 2009

மண்வாசனை

மழைத்துளிகள்
மண்ணைக் கிளறின

மண்வாசனை
மனதைக் கிளறியது

காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது

தாரணிப் பாப்பாவின்
தொலைந்த கம்மல்
மழையோடு ஒதுங்கியது
மனதுள் வந்தது

மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது

இப்பொழுதும்
அதே மழைதான்...
படகுகள் மிதந்து செல்கின்றன

வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்

கடையின் வாசத்துடன்
முறுக்கும் வடையும்...

மண்வாசனை ...
மறைந்து போனது

23 comments:

தமிழ் அமுதன் said...

நேற்று பெய்த மழையில்!
இன்று முளைத்த கவிதை?

அன்றைய மழையும்!
இன்றைய மழையும்!

ஒப்பீடு அழகு!

சத்ரியன் said...

//இப்பொழுதும்
அதே மழைதான்...
வாசலில்...
மழை ஒதுக்கிய குப்பைகள்
மண்வாசனை ...
மறைந்து போனது //

ம்ம்ம்...!...மலரும் நினைவுகள். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நட்புடன் ஜமால் said...

மொறுமொறு முறுக்கும்
சூடான வடையும்
அம்மாவின் கைமணத்துடன்
வாசம் வீசியது]]


மீண்டும் அந்த மழை நாட்களுக்கு சென்று விட்டேன் ...

அப்துல்மாலிக் said...

நாங்க இங்கே வெயில்லே காஞ்சுப்போய் இருக்கிறோம், உங்களுக்கு இப்போ மண்வாசனை பற்றி அசைப்போடுகிறீர்கள்.........

அமுதா said...

நன்றி ஜீவன்
நன்றி சத்ரியன்

நன்றி ஜமால்
நன்றி அபுஅஃப்ஸர்

அ.மு.செய்யது said...

எழுத்துகளை அள்ளி கொள்ளச்செய்கின்றன கவிதை..

மண்வாசனையும் முறுக்கு வாசனையும் ப்ப்ச்ச்....அசத்துறீங்க..!

அமுதா said...

நன்றி செய்யது.

சந்தனமுல்லை said...

//
காகிதக் கப்பல்
சுழன்று சுழன்று
மூழ்கிய காட்சி
நெஞ்சுள் சுழன்றது
//

:-) நல்லாருக்கு!

தமிழ் said...

நன்றாக இருக்கிறது

அமுதா said...

நன்றி முல்லை

அமுதா said...

நன்றி திகழ்மிளிர்

ஹேமா said...

அமுதா மழையில் நனைந்தீர்களா....நினவில் நனைந்தீர்களா !மண்வாசனை அது எந்த நேரத்திலும் மூக்கின் ஓரம்தான்.மறையாது...மாறாது.

அரங்கப்பெருமாள் said...

நகர வாழ்க்கை அப்படி... கிராம வாழ்க்கை கொஞ்சம் பரவாயில்லை... எங்கள் வாழ்க்கை(?????)...

அமுதா said...

/*ஹேமா said: மண்வாசனை அது எந்த நேரத்திலும் மூக்கின் ஓரம்தான்.மறையாது...மாறாது.*/
ஆமாம் ஹேமா. நன்றி

நன்றி ArangaPerumal

அமிர்தவர்ஷினி அம்மா said...

மழை மண்வாசனையோடு சேர்த்து ஒரு அருமையான கவிதையும் கொடுத்துட்டு போயிருக்கு

நல்லா இருக்கு அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

தாரும் சிமெண்டும் மண் வாசனையை பொத்திவைத்துக்கொண்டனவோ!!.. கவிதை நன்று!

அமுதா said...

நன்றி அமித்து அம்மா
நன்றி உழவன்

priyamudanprabu said...

நன்றாக இருக்கிறது
அனுபவிது எழுதியது போல

குடந்தை அன்புமணி said...

உங்கள் கவிதைகள் எனது ஞாபகத்தைக் கிளறின...

நல்ல கவிதை...

மழைக்காலத்தில் சுடச்சுட... வடையோ முறுக்கோ எதுவானாலும்.... ம்...

அமுதா said...

நன்றி பிரபு
நன்றி அன்புமணி

துபாய் ராஜா said...

மழையினை ரசித்த காலங்களை நினைவு படுத்திய இனிமையான வரிகள் அருமை.

வாழ்த்துக்கள்.

அமுதா said...

நன்றி ராஜா

ராமலக்ஷ்மி said...

மறைந்து போன மண்வாசனையை நினைவு கூர்ந்திருந்தாலும், படித்து முடிக்கையில் மறையாமல் மனதில் நின்றது மண்வாசனை. நல்ல கவிதைக்கு நன்றி அமுதா!