மழை ஓய்ந்துவிட்டது
பேச்சு ஓயவில்லை
காற்று ஓய்ந்துவிட்டது
கதைகள் ஓயவில்லை
கண் ஓய்ந்துவிட்டது
கனவுகள் ஓயவில்லை
கை ஓய்ந்துவிட்டது
வேலைகள் ஓயவில்லை
கால் ஓய்ந்துவிட்டது
பயணங்கள் ஓயவில்லை
மனம் ஓய்ந்துவிட்டது
எண்ணங்கள் ஓயவில்லை
எது ஓய்ந்தாலும்
பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...