என் மேகம் ???

Friday, October 30, 2009

சொல்லப்படாத கதை ஒன்று

சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

உழைத்துக் கொண்டிருந்தோருக்கு
க‌தை சொல்ல‌வோ கேட்க‌வோ
நேர‌மில்லை

உறங்கிக் கொண்டிருந்தோருக்கு
கனவில்கூட கதைக்கு
இடமில்லை

தொலைக்காட்சியில் க‌ட்டுண்டோருக்கு
இந்த‌ க‌தை கேட்க‌
விருப்ப‌மில்லை


ப‌டித்துக் கொண்டிருந்த‌ குழ‌ந்தைக்கு
க‌தை கேட்க‌வோ சொல்ல‌வோ
அனும‌தியில்லை

ப‌ய‌ணித்துக் க‌ளைத்த‌ க‌தையை
அம்மா அழைத்து
குழ‌ந்தைக்கு சொன்னாள்

எங்கோ...
சொல்லப்படாத கதை ஒன்று
விழித்தெழுந்து சொல்ல‌ப்ப‌ட‌
ப‌ய‌ண‌ம் கொண்ட‌து

7 comments:

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா. சொல்லப்படாத கதைகள் ஆயிரமாயிரமே. அதில் பயணம் கொண்ட ஒருகதையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆம் உலகின் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படாத கதை இருக்கலாம்

ஏன் ஒவ்வோர் மனிதனும் ஒரு சொல்லப்படாத கதை வைத்திருப்பான்...

கவிதை வெகு சிறப்புங்க..

பின்னோக்கி said...

அருமையான கவிதை. படித்த உடன் சிறிது நேரம் யோசிக்கவைத்தது.

அமுதா said...
This comment has been removed by the author.
அமுதா said...

நன்றி அருணா
நன்றி இராமலஷ்மி மேடம்
நன்றி வசந்த்
நன்றி பின்னோக்கி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு அமுதா..:)