என் மேகம் ???

Wednesday, February 2, 2011

ட்வீட்ஸ்

இந்த ஒற்றை வரி ட்விட்டர் மிகவும் ஈர்த்தது. இதுவரை ட்வீட் செய்தவை...

வலைதளம் “என் வானம்” என்றால் ட்விட்டர் தளம் “என் மேகம்”? #மே I கம்

வீடு முழுதும் பூத்துக்குலுங்குகிறது # குழந்தையின் கைவண்ணம்

உன் கரம் பிடித்து செல்லும் பொழுது சாலைகள் முடிவதில்லை... மனதின் ஆசைகள் போலவே...

பட்டுபூச்சிகளின் வர்ணம் மேலும் மிளிர்கிறது ... குழந்தையின் இரசிப்பிலும் வர்ணிப்பிலும்

அழுதால் சாதி தெரிந்துவிடும் என்று அழவில்லை என்று படித்த அதே பத்திரிகையில் தான் “ராமானுஜர் cult" என்று பெருமையுடன் நினைவு நாடா சுழல்கிறது

ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னவாயினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் #http://www.smile.org.in/Sadhana_Main.aspx

முதலாளிகள் யுக்தி “பன்ச் தந்திரம்” என்றால் தொழிலாளிகள் யுக்தி “கைப்புள்ள”? # இவன் ரொம்ப நல்லவன்டா...

பிறந்த நாள் முடிந்தவுடன், அடுத்த பிறந்தநாளின் countdown-ஐ உளமார்ந்த மகிழ்ச்சியுடன் துவக்குபவர்கள் குழந்தைகள் தான் ; Happy Birthday Mohita

துள்ளிச் செல்லும் குழந்தைகளின் சிரிப்பு... அள்ளிக்கொண்டால் மனம் நிறையும்

”சத்தம் போடாதே” என்று சொன்னவுடன் அமைதியாகிவிடும் குழந்தையிடம் சொல்லத் தோன்றுகிறது “சொல் பேச்சு கேளாதே” என்று...

வாரநாள்னா ஆபீஸ்ல வேலை, வார இறுதினா வீட்ல வேலை

இந்த வாரமாவது ஏதாவது உருப்படியாக நடக்காதா என்ற நம்பிக்கையுடன் தான் விடிகிறது திங்கள் காலை... ஒவ்வொரு வாரமும்.

குழந்தையின் ஏக்கம் - எப்பொழுது வளர்வோம் என்று... பெரியவர்கள் ஏக்கம் - எதற்கு வளர்ந்தோம் என்று...

பள்ளி நாட்களில் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பெற்றோர் ; விடுமுறை நாட்களில் சீக்கிரம் எழுந்து பெற்றோரை எழுப்பும் குழந்தை

எந்த நொடியிலும் நிற்கப்போகும் இந்த இதயம்தான் அதற்குமுன் எதற்கெல்லாம், எப்படியெல்லாம் துடிக்கிறது!!!

இன்பம் பகிர்ந்து கொள்ளும் நொடிகள் அழகு; துன்பம் பகிர்ந்து கொள்ளும் இதயம் அழகு

5 comments:

Chitra said...

Good ones!

ILA (a) இளா said...

Btw, whatz your twitter ID?

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அழகு. ரசித்தேன் அமுதா:)!

அன்புடன் மலிக்கா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html

தமிழ் said...

/குழந்தையின் ஏக்கம் - எப்பொழுது வளர்வோம் என்று... பெரியவர்கள் ஏக்கம் - எதற்கு வளர்ந்தோம் என்று...

பள்ளி நாட்களில் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பெற்றோர் ; விடுமுறை நாட்களில் சீக்கிரம் எழுந்து பெற்றோரை எழுப்பும் குழந்தை
/
இரசித்தேன்