என் மேகம் ???

Monday, November 15, 2010

...

முகமூடி
========

யூனிபார்ம் அல்லாத
வேறு உடையில்
காணும் பொழுது
குழம்பித் தான் போகிறேன்

முகமூடி களைந்து
முகம் காட்டும்
பழகிய மனிதர்களைக்
காண்பது போல்...

விபத்து
=======

கனவுகளின் மிச்சம்
கடமைகளின் சொச்சம்
தீராத ஏக்கம்
சொல்லாத விஷயம்
தீண்டாத இன்பம்
துளைக்காத துன்பம்
இன்னும் பலவற்றை
நசுக்கிச் சென்றிடும்
வாகனம் ஒன்று...

பிணைப்பும் இழப்பும்
====================

பிணைப்பின் இன்பம்
அறியவில்லை
பிணையும் வரை...

பிணைந்த பின்
இழப்பின் பயம்
சுழலத் துவங்கும்...

இழப்பின் வலி
ஊடுருவும் வரை
அறியவில்லை

இழந்த பின்...
இழப்பின் பயம்
காணவில்லை

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ நிஜம்மாவே கலக்கறீங்க..அமுதா.. ஒவ்வொன்னும் பல யோசனைய கொண்டுவருது.

ராமலக்ஷ்மி said...

மூன்றுமே மிக அருமை அமுதா.

//இழந்த பின்...
இழப்பின் பயம்
காணவில்லை//

ஆழமான உண்மை.

அன்புடன் நான் said...

முதல் கவிதை.... நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

தமிழ் said...

சீருடைக் கவிதை அருமை

அனைத்தும் அழகு