சிறகொடிந்தாலும்
சிறகிழந்தாலும்
கற்களால் வீழ்ந்தாலும்
கண்ணாடித் திரையிட்டாலும்
எல்லோருக்குமான வானில்
தன் இடம் இருத்திக் கொள்ள
காலம் காலமாக போராடுபவள்...
அன்பெனும் போர்வையில் அழுத்தம் ..
ஆகாதென்று கூக்குரல் ..
இயலாது என்று முட்டுக்கட்டை ..
போதாதா என்று போர்க்குரல்..
சில பறவைகளின் வரவுக்கே
வானம் வசமானது என கூக்குரல்கள்
மனம் தளருவதில்லை அவள்
கடக்கும் ஒவ்வொரு அடியும்
நாளைய பெண்ணிற்கு
வானம் வசப்படும் வழி
மகளிர்...
தொட்டு விட்ட உயரம்
கடந்து வந்த தூரம்
கொண்டாட மட்டுமல்ல
தடைகளும் திரைகளும்
சமூகம் தகர்க்க
விழிப்புணர்வு தரும் தினம்
எல்லோருக்கும் வானம் வசப்பட
இனிய மகளிர் தின வாழ்த்துகள்💐
No comments:
Post a Comment