வரையறைகள்
------------------
உயிரை வரையறுப்பான் ஒருவன்
உணவை வரையறுப்பான் ஒருவன்
ஒழுக்கம் வரையறுப்பான் ஒருவன்
ஒற்றுமை வரையறுப்பான் ஒருவன்
கடவுளை வரையறுப்பான் ஒருவன்
கருத்தை வரையறுப்பான் ஒருவன்
காலத்தோடு மாறும் என்பான் ஒருவன்
காலத்தால் மாறாதென்பான் ஒருவன்
தனக்கென மாற்றுவான் ஒருவன்
தனக்கல்ல என மாற்றுவான் ஒருவன்
வரையறைப்பவனிடம் கேள்வி கேட்டால்
வரையறைக்குள் சிக்காதவர் ஈனர் என்பான்
தொல்லை...
அவரவர் வரையறைக்குள் இருப்பதல்ல
அடுத்தவர் வரையறையை சீண்டுவதால்
No comments:
Post a Comment