என் மேகம் ???

Tuesday, June 26, 2012

நினைவுகள் பூட்டிய வீடு



பூட்டிய வீடு
கண்ணில் பட்டதும்
உருகத் தொடங்கிடும்
நினைவுகள்

எத்தனை முறை
பூட்டித் திறந்தாலும்
சுற்றிக் கொண்டே இருக்கும்
நினைவுகள்

எத்தனை முறை
பெருக்கித் துடைத்தாலும்
புதுவெள்ளமாக பொங்கும்
நினைவுகள்

ஒவ்வொரு கணமும்
உறைந்து போகின்றன
காலத்தின் துகளாய்
என்றென்றும் பூமியில்


பூட்டப்படும் பொழுதெல்லாம்
மனதோரத்தில்
உறைந்து நிற்கின்றன
நினைவுத் துகள்கள்

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\எத்தனை முறை
பூட்டித் திறந்தாலும்
சுற்றிக் கொண்டே இருக்கும்
நினைவுகள்//
ம்.. குட்...

ராமலக்ஷ்மி said...

/எத்தனை முறை
பெருக்கித் துடைத்தாலும்
புதுவெள்ளமாக பொங்கும்
நினைவுகள்/

ஆம், எத்தனை நினைவுகள். நல்ல கவிதை அமுதா.