என் மேகம் ???

Wednesday, November 11, 2009

குழந்தைகள் கையில் பலூன்

சின்ன சின்ன கைகளில்
பச்சை நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம்

சிவப்பு நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
மழைக் காலம்...
பச்சை நிற பலூன் கேட்டு

பலூனின் நிறத்தில்
ஒன்றுமில்லை என
சிவப்பின் மகத்துவத்தை
சொல்லலானாள் தாய்

குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!

8 comments:

தமிழ் அமுதன் said...

//குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!! ///

supper ..!

பின்னோக்கி said...

//வசந்த காலம்
//மழைக் காலம்

சூப்பர் !!! அருமையான உவமை.
அடிக்கடி எழுதுங்கள்.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு!
ஷிவ்கேராவின் புத்தகத்திலுள்ள ஒரு கதையையும் நினைவூட்டுகிறது இந்த கவிதை - பலூனின் நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருப்பதுதான் என்பதுபோல!

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!

யதார்த்தம் அமுதா.

ராமலக்ஷ்மி said...

//குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா.

"உழவன்" "Uzhavan" said...

அழகான கவிதை :-)

ப்ரியமுடன் வசந்த் said...

//பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம் //

இயல்பான உண்மை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான கருத்து அமுதா :)