மழை ஓய்ந்துவிட்டது
பேச்சு ஓயவில்லை
காற்று ஓய்ந்துவிட்டது
கதைகள் ஓயவில்லை
கண் ஓய்ந்துவிட்டது
கனவுகள் ஓயவில்லை
கை ஓய்ந்துவிட்டது
வேலைகள் ஓயவில்லை
கால் ஓய்ந்துவிட்டது
பயணங்கள் ஓயவில்லை
மனம் ஓய்ந்துவிட்டது
எண்ணங்கள் ஓயவில்லை
எது ஓய்ந்தாலும்
பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...
No comments:
Post a Comment