என் மேகம் ???

Wednesday, April 4, 2012

சிங்கப்பூர் ஜூ + நைட் சஃபாரி (சிங்கப்பூர் பயணம் - நாள் 4)

முந்தைய பாகத்திற்கு "இங்கே

இரண்டு நாளா காலைல அவசர அவசரமா கிளம்பி 10 மணிக்குள்ளே செண்டோசாவில் இருக்க ஓடினோம். அடுத்த இரண்டு நாள் கொஞ்சம் மெதுவா தான்னு முடிவு பண்ணிட்டோம். ஜூவைப் பகலிலும், இரவிலும் பார்க்க முடிவு பண்ணினதால், மெதுவா கிளம்பறது இன்னும் நியாயமாப் பட்டது. சிங்கப்பூர்ல மெட்ரோ த்டங்களை அழகா இணைச்சிருக்காங்க. வரைபடமும் தெளிவா இருக்கு. எங்கே இரண்டு தடம் இணையுதுனு பார்த்து , கரெக்டா அந்த ஸ்டேஷன்ல இறங்கிட்டா, இன்னொரு தடம் மெட்ரோ ஏறுவது எளிதா இருக்கு. உதாரணத்துக்கு நாங்க ஜூ போக ”ஆங் மோ கியோ” ஸ்டேஷன் "NS" வழிதடம். நாங்க இருக்கிற ஃபேரர் பார்க், "NE" வழிதடம். “NS", "NE" வழிதடம் இணையறது “டோபி காட்” என வரைபடம் பார்த்தாலே தெரியும். அதனால ”ஆங் மோ கியோ”க்கு டிக்கட் எடுத்துட்டு, "NE" வழிதடத்தில் டோபி காட்ல இறங்கி அங்கே “NS" வழிதடம் மாறி ”ஆங் மோ கியோ” இறங்கி பஸ் பிடிச்சு ஜூ போகலாம்.


ஜூவில் நாங்க வாங்கினது ”பார்க் ஹாப்பர் 3-in-1"
ஒரு மேப் கொடுத்துடறாங்க. அதில் விலங்குகளின் உணவு வேளைகளும், ஷோ வேளைகளும் இருக்கும். நாம ப்ளான் பண்ணி பார்க்கணும். நாங்க “அனிமல் ஷோ” ”ஸ்ப்லாஷ்” மட்டும் ப்ளான் பண்ணினோம். முதல்ல போட் ரைட் போனோம். அப்புறம் வித விதமான் விலங்குகள். நம்ம ஊர்ல பார்க்க முடியற யானை எல்லாம் விட்டுட்டோம். ட்ராம் டிக்கட் எடுத்துட்டு, அப்பப்ப ட்ராம்ல ஏறி ஷோ டைமுக்கு கரக்டா ஆஜ்ர் ஆகிட்டோம்.









அனிமல் ஷோ வளையத்தில் தாவும் நாய், மறைத்த வாட்சை கண்டுபிடிக்கும் நாய், ஓடி செல்லும் பூனை எலி என சின்ன குழந்தைகளுக்கானது


ஸ்ப்லாஷ் ஷோ சீலின் சாகசம். முன்னால் உட்கார்ந்தால் சுழன்று சுழன்று நம் மீது தண்ணீர் இறைக்கும்.




பென்குயினைக் கண்டதுடன் பகலில் ஜூவின் பயணம் முடிவுற்றது. இனி “நைட் சபாரி” 7:30 மணிக்கு. அங்கே சற்று கொறித்துவிட்டு நைட் சபாரி நோக்கி சென்றோம்.

நைட் சபாரி செல்லும் வழியில் தீ விளையாட்டு நடக்கும்

நைச் சபாரியில் ட்ராமில் ஏறி விலங்குகளை இரவின் ஒளியில் காட்டுவார்கள். வித்யாசமான அனுபவம். நடந்து செல்ல நான்கு தடங்கள் உண்டு. "leopard trai", "fishing cat trail" "Forest giants trail" "naracoorte cave". ட்ராமில் லெபர்ட் ட்ரைய்லில் இறங்கலாம். இறங்கினோம். காட்டுக்குள் செல்வது போல் இருந்தது. நல்ல இருள். ஒளி இருந்தாலும், கொஞ்சம் திக் திக் தான்... குட்டீஸ் ரொம்பவே பயந்து விட்டார்கள். கூண்டுக்குள் இருக்கும் சிறுத்தை தான் என்று அறியும் வரை அவர்களுக்கு திக் திக் திக் தான். வவ்வால் இருக்குமிடம் செல்லும்பொழுது உறைந்து போனார்கள். கடைகளும் உண்டு... ஒரு கடையில் ஜூஸ் குடித்தபின் தெளிந்து, ஒண்ணும் வெளியே இல்லை என்று தைரியமாக எல்லா தடங்களுக்கும் ரெடியானார்கள். ரிலாக்ஸ்டாக ட்ராமில் ஏறி, பின் எல்லா தடமும் சென்று நைட் சபாரி ஜாலியாகச் சென்றது.


7:30, 8:30 என்று அனிமல் ஷோ உண்டு. சனி/ஞாயிறு 9:30க்கும் உண்டு. எனவே நைட் சஃபாரி முடிந்து அனிமல் ஷோ போனோம். அவ்வப்பொழுது கழுதைப்புலிகள் வேலியிடப்பட்ட மேடைக்குப் பின் உண்வு எடுத்து சென்றன. மலைப்பாம்பை பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எடுத்தனர். இளம் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு மாயமானார்கள். நீர் நாய்கள் அழகாக ப்ளாஸ்டிக், பேப்பர் , பாட்டில் என இனம் பிரித்து அதனதன் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைச் சேர்த்தன.

இவை முடிந்து ஊர் திரும்ப பேருந்துகளும், மெட்ரோக்களும் நள்ளிரவு வரை இயங்குகின்றன. கடைசி பேருந்து/மெட்ரோவின் நேரத்தைக் குறித்துக் கொள்வது நலம்.

1 comment:

ராமலக்ஷ்மி said...

விரிவான தகவல்களும் அழகான படங்களுமாக அனுபவப் பகிர்வு மிக அருமை அமுதா.