என் மேகம் ???

Saturday, December 24, 2011

அதீதத்தில் “மழை”

சென்னையில் மழை பொழிந்ததொரு பொழுதில் எழுதியது தான் இப்பொழுது அதீதம் டிசம்பர் 11, 2011 இதழில் வெளிவந்துள்ளது.

மழை
---------
குழந்தையின் கேள்விகளாக
ஓயாது பொழிகிறது

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்

அடித்து வரும் குப்பைகளாக
வலிகளையும் அள்ளிவரும்

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்

முத்தென்று ஆர்ப்பரிப்பாள்
விண்மகள்

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்

4 comments:

ராமலக்ஷ்மி said...

/குழந்தையின் கேள்விகளாக
ஓயாது பொழிகிறது

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்

அடித்து வரும் குப்பைகளாக
வலிகளையும் அள்ளிவரும்

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்/

உவமைகள் அனைத்தும் அழகு.

/முத்தென்று ஆர்ப்பரிப்பாள்
விண்மகள்

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்/

ரசித்த வரிகள்.

அருமையான கவிதை அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு அமுதா..
துடைக்கப்பட்ட அழகான முற்றம் தரட்டும் மழை..அனைவருக்கும்..

நல்லவன் ..... பாலா said...

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்/

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்/

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்/


மண்வாசனை....துடைக்கப்பட்ட முற்றம்.....
மரகதம்........அருமை வாழ்த்துக்கள்

rishvan said...

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்...அழகான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...