என் மேகம் ???

Wednesday, May 18, 2011

ட்வீட்ஸ்

கதையை விட சுவாரஸ்யமானது குழந்தை கதை கேட்கும் அழகும் , கேள்விகளும்....

நிலவைப் பிடிக்கத் துடித்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் முடிவில் ஓய்வதென்னவோ மண்ணின் மடியில் தான்

நிழலை நிஜம் என்று எண்ணினால் மூன்றாம் பரிமாணம் இருப்பதே தெரியாது.

துறுதுறுவென சுற்றும் குழந்தையின் காலடியில் அலைகள் கூட ஓய்ந்து போகின்றன

காற்று கூட இல்லாத தனிமை கோடை காலத்து இரவுகளில் நிச்சயம் கிடைக்கும் #அக்னி நட்சத்திரம்

”லட்சம்” சாதாரணமானது, பின் ”கோடி” பின் , “லட்சம் கோடி” .. #ஆத்திகமோ நாத்திகமோ இந்த விஷயத்தில் நல்ல ஒற்றுமை....

”சார் தந்தி” என்ற முன்னெச்சரிக்கை, தொலைபேசியில் வரும் மரணச் செய்தியில் இருப்பதில்லை

புதிதாய் வரும் உறவுகள் மனதின் இளமையை உணரச் செய்கின்றன... பழைய உறவுகளின் பிரிவு முதுமை நோக்கிய் பயணத்தை உணரச் செய்கின்றன

காலம் செல்ல செல்ல அடையாளங்கள் தொலைந்து தான் போகின்றன.... புது அடையாளங்கள் கிடைக்கின்றன என்றும் சொல்லிக் கொள்ளலாம்

அறிவியலுடன் முட்டிக் கொண்டிருந்த குட்டிப்பெண்ணிடம் “நைட் ஏன் வருது?’ “மூன் வர்றதால...” #எல்லாமே இப்படி சிம்பிளாக இருந்தால் நன்றாக இருக்கும்

காலம் காலமாக ஓயாமல் ஆர்ப்பரிக்கும் இந்த கடல் அலைகள் என்ன தான் சொல்ல வருகின்றன?

நிலவின் ஒளியை மறைக்க முயலும் மேகமும் ஒளிர்கிறது நிலவின் ஒளியில்...

நிம்மதியான வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றும் வலிமை இயற்கைக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...

2 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை.

Chitra said...

நிம்மதியான வாழ்க்கையை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றும் வலிமை இயற்கைக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு

... The best! :-)